புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நவீன யுகத்தில் வாழும் நாம் உடல் ரீதியாக பல்வேறு நோய்களிற்கு உள்ளாவது மறுக்க முடியாததொன்றாகும்.இதற்கு பல்வேறு மருத்துவ முறைகள் காணப்பட்டாலும் யோகாசனமே சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது. யோகாசனத்தை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு காணப்படும்.
ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.ஆசனங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமன்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
சில ஆசனங்கள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்

தணுராசனம்
முதலில் குப்புறப்படுக்கவும்,பின்பு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து முறையாவது செய்தல் நன்று.இதனால் வயிற்றில் உள்ள வேதிபொருளாலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடல் உற்சாகம் அடைகிறது

சிரசாசனம்  
தலை தரையில் படுமாறு கால்களை மேலே உயர்த்த வேண்டும்.அதாவது தலைகீழாக நிற்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.இதனை தினமும் செய்தால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், மூளை சிறப்பாக செயல்படும்.

வஜ்ராசனம்
இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே நிலையில் 15 நிமிடம் இருக்கவும். இதனால் வயிற்றில் உள்ள கோளாறுகள் நீங்கும்.அத்துடன் அஜீரணம் குணமாகும்.

பத்மாசனம் 
நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேராக நிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். இதனால் இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சரியாகும், உடலில் சுறுசுறுப்ப ஏற்படும்.

புஜங்காசனம் 
தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது.   இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.  

பச்சிமோத்தாசனம்
இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்டை விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் ஐந்து நிமிடங்கள் வரை இருக்கவும்
இதனால் தொப்பை குறையும் , இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.

விபரீதகரணி 
நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.   இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.
மேற்கூறிய ஆசனங்களை செய்து பாருங்கள்.உடல் ஆரோக்கியம் அடையும்.

2 கருத்து:

 
Top