
கிராமப் பாடசாலையில் கல்வி பயின்ற சுனிமல் என்ற இந்தச் சிறுவன் படிப்பில் படு கெட்டி. எனினும் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பொழுதுபோக்குகளிலும் அவனுக்கு வெகுவாக நாட்டம் இருந்தது.
ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்ததும் அவனது அம்மாவின் கெடுபிடி அதிகரித்தது. "ரீவி பார்க்காதே, விளையாடாதே படிபடி'' என நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.
பாடசாலை முடிந்ததும் அண்மையில் உள்ள நகரில் "ரியூசன்" வகுப்பு இரவுவரை. வீட்டுக்கு இரவில் வந்தால் சாப்பிட மட்டுந்தான் அனுமதி. ரீவியைத் தொடமுடியாது.
ஓய்வான நேரங்களில் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவும் அனுமதியில்லை. இவ்வாறான கெடுபிடியை அடுத்தே சிறுவன் தான் நினைத்ததைச் செய்து முடித்துள்ளான்.
0 கருத்து:
கருத்துரையிடுக