புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மங்காத்தாவின் சூப்பர் ஹிட் வெற்றியால், மீண்டும் வெங்கட்பிரபு கூட்டணியில், அஜித் ஒரு படம் பண்ணப்போவதாகவும்,அந்தபடத்தில் அஜித்துடன், சிம்புவும் சேர்ந்து நடிக்க போவதாகவும், இப்படத்தை பல வெற்றி படங்களை கொடுத்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தல ஓகே சொன்னதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது ஏ.எம்.ரத்னம் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. மேலும் இப்படத்தை அஜித்திற்கு, பில்லா படத்தை கொடுத்த விஷ்ணுவர்தனே இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே அஜி்த் இப்போது நடித்து வரும் பில்லா-2-வை, விஷ்ணுவர்தன் தான் முதலில் இயக்குவதாக இருந்து, பின்னர் அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சக்ரி டோல்டி அந்த பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top