புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நவீன காலப்பகுதியில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.இதனால் குடும்பத்தை நடத்தும் பொறுப்பு, பணிச்சுமை போன்ற பலவிதமான காரணங்களால் கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பையோ, பிரச்சனைகளையோ பரிமாறிக் கொள்வது குறைந்து வருகிறது . 

மனம் ஒத்த தம்பதிகளாக நூற்றுக்குப் பத்து பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ மனமில்லாமல் தங்களில் யார் பெரியவர் என்ற மனநிலையிலேயே காலத்தை கழித்து விடுகின்றனர்.

காலப்போக்கில் கணவன், மனைவி இருவருமே குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்ற சூழ்நிலை உருவாகி விடுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் வாழும் காலம் வரை கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும். இப்படி இல்லறத்தை நடத்துபவர்களும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடப் போகின்றவர்களும் கீழே உள்ளதைப் படித்து இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கே உரிய பழக்கத்தில் இதை வாங்கிக் கொடுங்கள்., அதை வாங்கிக் கொடுங்கள் என்று அவரை நச்சரிக்கதீர்கள். அவருக்கு உரிய கடமைகளை முறையாகச் செய்யுங்கள்., கணவர் மனம் வருந்தும்படி எந்த நாளும் ஒரு செய்ய்யாதீர்கள். எப்போதும் கனிவான வார்த்தைகளையே பேசுங்கள். அவர் ஊரில் இல்லை என்றால், நான் என்னை அலங்கரித்து கொள்ளாதீர்கள். கணவருக்கு எந்த ஒரு தொந்தரவையும் கொடுக்காதீர்கள் . கணவருக்குப் பிடித்ததை மட்டுமே சமையுங்கள். பணி நிமித்தம் கணவர் வெளியே எங்காவது சென்றிருந்தால், அவர் திரும்பி வரும்வரை தெய்வ வணக்க வழிபாட்டில் இருங்கள்.

அசதியின் காரணமாக அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது எத்தகைய முக்கியமான செய்தி என்றாலும், அவரை எழுப்பாதீர்கள். எனக்குப் பணம் தாருங்கள் என்று அவரிடம் எந்த நாளும் கேட்க்காதீர்கள். (இதைப் படிக்கும் கணவன்மார்களுக்கு, தங்களது மனைவியும் இப்படி இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்கிற ஏக்கம் வருவது இயற்கை! உண்மை! எதிர்பார்ப்பு) ஆனால், இல்லறம் என்பது கணவனும் மனைவியும் இணைந்து நடத்துகிற நல்லறம்! அதில் கண்ணீரும், கவலையும் கலந்து விடாமல் இருக்க வேண்டும்!கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர்  செலுத்துகிற அன்பே, இந்த இல்லறத்தின் மூலதனம் ! இதயம் மட்டும் உறுதி கொண்டதாக அமைந்து விட்டால், ஒரு சுண்டெலிகூட யானையைத் தாக்கி விடும் என்பது மேலைநாட்டுப் பழமொழி. உங்கள் இதயங்களை உறுதி கொண்டதாக ஆக்குங்கள். இல்லறம் நல்லறமாக மாறும்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top