புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரு துளி ஜலத்தை எடுத்து நன்றாகக் காய்ந்த இரும்பின் மேல் விட்டால் அத்துளி இருந்த இடமே தெரியாமல் போய்விடுகிறது. அதே துளியைத் தாமரை இலையில் விட்டால் முத்து போல் காணப்படுகிறது. மறுபடியும் அதே ஜலமானது சமுத்திரத்தின் மத்தியிலிலுள்ள சிப்பியில் இட்டால்
அது உண்மையாகவே முத்தாகி விடுகிறது. அதுபோல அதமனுக்கும், மத்தியமனுக்கும், உத்தமனுக்கும் அவரவர்கட்கு ஏற்றவாறு பலன் கிடைக்கும். இங்கு இரும்பு அதமனுக்கும், தாமரை இலை மத்தியமனுக்கும், சிப்பி உத்தமனுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.    

இதுதான் நம் வாழ்வின் கடைசிதினம் என்ற உணர்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் நாம் மிக்க பயனுடையதாய்ச் செலவிட வேண்டும்.

அளவுக்கு மீறி பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் உங்களை நீங்கள் வாட்டிக் கொள்ளாதீர்கள். உண்மையான உழைப்பின் துணை கொண்டு, நியாயமாகக் கிடைப்பதை நன்கு அனுபவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டவனுடைய வாழ்க்கை சுவையுடையதாய் இருக்கும்.

அளவுக்கு மீறி பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் உங்களை நீங்கள் வாட்டிக் கொள்ளாதீர்கள். உண்மையான உழைப்பின் துணை கொண்டு, நியாயமாகக் கிடைப்பதை நன்கு அனுபவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டவனுடைய வாழ்க்கை சுவையுடையதாய் இருக்கும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top