புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailஅமெரிக்காவில் வசிக்கும் மக்களில் பதினைந்து பேரில் ஒருவர் ஏழையாக உள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த கணக்கெடுப்பில் தெரிவித்திருப்பதாவது:கடந்த 2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள
குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11 ஆயிரத்து 157 டாலராகவும் , தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்‌கு கீழே உள்ளவர்கள் வறுமைக்‌கோடிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுமார் 20.5 மில்லியன் அமெரிக்க மக்கள் அதாவது அமெரிக்‌க மக்கள் தொகையில் 6.7 சதவீதத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், 50 சதவீதம் பேர் வறுமைக்கோடில் வசிப்பதாகவும் தெரிவிக்‌கப்பட்டுள்ளது. மேலும் 40 க்கும் மேற்பட்ட மாவடங்களை கொண்டதாக விளங்கும் கொலம்பியா மாகாணத்தில்கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இங்கு 10.7 சதவீதத்தினர் வறுமையில் வாடுவதாகவும், மற்ற மாகாணங்களான மிஸிசிபி,நியூமெக்‌சி‌கோ, நிவேதா ஆகியவற்றில் 4.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டிற்கு பின்னர் தான் அமெரிக்காவில் வேலைவாய்‌ப்பின்மை என்பது அதிகரித்து வந்துள்ளது என்றும் , தொழிற்துறை நகரங்களான டெட்ராய்டு, கிராண்ட் ரேபிட், ஓ‌கியோ, ஆகிய இடங்களில் வறுமை நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், லாஸ்வேகாஸ், கேப்கோரல், கலிபோர்னியா பகுதிகளில் ‌வேலைவாயப்பு வசதி இல்லாததால் வீடுகளின் மதிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 2000 ஆண்டிற்க பின்னர் மட்டும் ஏழைகளின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top