புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

என்ன தான் உலகிலேயே பெறுமதியான கார் வைத்திருந்தாலும், வீதி ஒழுங்கு முறைகளை மீறினால் அதற்கான தண்டப்பணம் கட்டியே ஆகவேண்டும். Essex நகரில் நடைபெற்ற இந்த சுவாரசியமான சம்பவம் பலருக்கும் முன்னுதாரணமாக சொல்லப்படவேண்டியது.Bugatti Veyron எனும் கார் தான் உலகில் அதிக பெறுமதியான ஸ்போர்ட்ஸ் கார். இதன் பெறுமதி £840,000 (என்ன தலை சுத்துதா?) இந்த காரை முறையாக தரிப்பிடத்தில் நிறுத்தாத படியால் பொலிசாரால் தண்டப்பணம் அறவிடப்பட்டது.

அதுவும் அரை மணித்தியாலங்கள் நிறுத்திய குற்றத்திற்காக அதி உச்ச வேகத்தை பெறுவதற்காக 16-cylinder களை கொண்டது.  இதன் மூலம் 0-60 Kmph கதியை 2 .5 செக்கனுக்குள் அடைந்துவிடும்.  

இந்த கார் இங்கு நின்றபோது அவ்வழியே செல்பவர்களெல்லாம் தமது கைத்தொலைபேசியின் மூலம் படம் எடுத்தனர். ஆனால் கடமை உணர்ச்சிமிக்க ஒரு போலிஸ் உத்தியோகஸ்தர் இந்த குற்றத்தை கண்டுபிடித்து தண்டப்பணம் அறவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top