புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெளிநாட்டு நாணயத் தாள்களை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவரிடம் இருந்து 51 இலட்சம் ரூபா பெறுமதியான யூரோ நாணயத்
தாள்கள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணத்தை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட குறித்த நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top