புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தாராபுரத்தில் ஆடு வயிற்றில் மனித தலையுடன் குட்டி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபாளையத்தை சேர்ந்தவர் காதர்அலி(50). அலங்கியம் சாலையில் பொன்னு நிலையம் அருகே ஆடு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று தன்னிடம் இருந்த சினை
ஆட்டை அறுத்தபோது, அதன் வயிற்றில் மனித குழந்தையை போல குட்டி ஆடு இருந்துள்ளது.

இது குறித்து காதர்அலி கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆடு வாங்கினேன். வாங்கும்போதே ஆடு சினையாக இருந்தது. குட்டி போட்ட பிறகு அறுத்து விடலாம் என்று வீட்டிலேயே கட்டி வைத்து வளர்த்து வந்தேன்.  கடந்த 2 நாட்களாக ஆடு குட்டி போட முடியாமல் வேதனையோடு தவித்தது. இறந்த ஆடுகளை அறுத்து விற்பனை செய்யமாட்டோம். நேற்று மதியம் அந்த ஆடு இறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. கறிக்காக ஆட்டை அறுத்த போது, அதன் வயிற்றில் மனித குழந்தையை போல உருவம் கொண்ட ஆட்டுக் குட்டி இறந்த நிலையில் இருந்தது. அதைப்பார்த்த எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு காதர்அலி கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top