புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 25 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை.பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டோனா தீவில் நாப்னாப்பேன் பகுதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக தங்க கனிமத்தை தேடும் பணியில், நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர். அதனால், அப்பகுதியே கரைந்து, இது நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என, கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோர் தங்கத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இப்பகுதியில், நேற்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து வந்த மீட்பு படையினர் பல மணி நேரம் போராடி, 15 பேர்களது உடல்களை வெளியே எடுத்தனர். இவ்விபத்தில், 25 பேர் பலியாகி இருப்பர் என்றும், 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் தெரிகிறது.

இவ்விபத்து குறித்து அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ கர்னல் லிண்டன் பனிசா கூறுகையில், ""அப்பகுதியில் 50 சிறிய குடில்களில் மக்கள் வசித்து வந்தனர். மேலும், 7,500 சதுர மீட்டர் பரப்பளவில் பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்த போது சம்பவம் நடந்துள்ளது. தங்க கனிம வளத்தை எடுக்க கோடரி, மண்வெட்டி போன்ற சாதாரணக் கருவிகளையே இவர்கள் பயன்படுத்தினர். இப்பகுதிக்கு 2 கி.மீ.,தொலைவில், கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், 14 பேர் பலியாகினர். மேலும், 2009ல் நடந்த மற்றொரு நிலச்சரிவில், 26 பேர் பலியாகினர்,'' என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top