புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியாகிவிடும். அதனால், காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் பண்ணுதல் கூடாது. நம் காதுகள் 80 லிருந்து 85 டெசிபல் வரைதான் சப்தத்தை தாங்கும் சக்தியுள்ளது என்பதால் அதற்கும் அதிகமான சப்தத்தை தவிர்ப்பது நல்லது.
 
சைனஸ், டான்சில், தாடை எலும்பியல் பிரச்சினை என்றாலும் காது பாதிக்கும் என்பதால் இப்பிரச்சினைகளை உடனே கவனிக்க வேண்டும். சப்தம் குறைவான இனிமையான பாடல்களை கேட்க வேண்டும். ஓடும் வண்டியிலிருந்து ரேடியோ, டேப் போன்ற இரைச்சலான சப்தத்தை தவிர்க்க வேண்டும்.
 
தொடர்ந்து பலமணி நேரங்கள் செல்போனில் பேச வேண்டிய சூழ்நிலையில் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது. மூக்கு எந்த விதத்தில் நமக்கு பயன்படுகிறது? மூக்கு நாம் சுவாசிக்கின்ற ஆக்சிஜனை நமது உடல் டெம்பரேச்சருக்கு தகுந்தவாறு வார்ம் பண்ணி நமது நுரையீரலுக்கு அனுப்புகிறது. கூடவே காற்றிலுள்ள நச்சுக்கிருமிகளை கொன்று நல்ல காற்றை உள்ளே அனுப்புகிறது.
 
சமயத்தில் ஒரு சிலருக்கு மூக்கில் ரத்தம் வருவது ஏன்?
 
மூக்கினுள்ளே ரத்தக்குழாய் உடைந்தாலோ, மூக்குக்குள்ளே சதை வளர்ந்தாலோ சைனஸ், உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையினாலே மூக்கில் ரத்தம் வரலாம்.
 
இதற்கு முதல் உதவி என்ன?
 
மூக்கை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு வாய்வழியாக சிறிது நேரம் சுவாசித்தாலே போதும். மூக்கில் ரத்தம் வடிவது நின்று விடும். அப்படியும் ரத்தம் வருவது நிற்கவில்லை எனில் மூக்கில் பஞ்சை அடைத்து தற்காலிகமாக இரத்தம் வருவதை நிறுத்துவிட்டு உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top