புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தனது சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கேவலம்கெட்ட தந்தை ஒருவர் ராகம - கல்வலவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ராகம - கல்வலவத்தை பகுதியில் வசிக்கும் இக்குடும்பத்தில் வறுமை காரணமாக தாய் வெளிநாடு ஒன்றுக்கு தொழில் புரிய சென்றுள்ளார்.

தாய் தனது 8 வயது மகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டுவிட்டே சென்றுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தது போல் 40 வயதுடைய குறித்த தந்தை 8 வயதான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

மனிதாபிமானமற்ற முறையில் 8 வயது சிறுமியிடம் அபாச படங்களை காட்டி அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் குறித்த தந்தை. இந்த சம்வம் தொடர்பில் ராகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது நேற்று (29) செய்துள்ளனர்.

சிறுமி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 30 திகதி மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top