அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில், ஒரு பெண் பிறந்து 3 நாளே ஆன தனது குழந்தையை ஆஸ்பத்திரி கார் பார்க்கிங் அருகே வைத்து கொண்டு நின்றார். அப்போது ஒரு பெண் அங்கு வந்து குழந்தையின் தாயிடம் சென்று தகராறு செய்தார்.
திடீரேன குழந்தையின் தாயை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 7 குண்டுகள் உடலில் பாய்ந்து அந்த இடத்திலேயே அந்தப் பெண் இறந்துவிட்டார். பின்னர் அந்தப் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடி விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பல இடங்களிலும் சோதனையிட்டு தேடினார்கள். இதனால் ஒரு இடத்தில் குழந்தையை போட்டுவிட்டு அவர் தலைமறைவாகி விட்டார். குழந்தையை போலீசார் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக