புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கடந்த புதன்கிழமை கனடா ரொரன்ரோ பொலிசார் தயாரூபன் மயில்வாகனம் என்பவரைக் கைதுசெய்துள்ளனர். 6 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று இவர் தேடப்பட்ட நிலையில், அச்சிறுமியின் அக்கா தனது மோபைல் போனில் புகைப்படத்தை எடுத்து பொலிசாரிடம்
கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து மயில்வாகனம் கைதானார் கடந்த திங்கட்கிழமை கனடா ஸ்காபரோப் பகுதியில் உள்ள கிளமோகன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயதுச் சிறுமி மீது, பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் 29 வயதாகும் தயாரூபன் மயில்வாகனம் என்னும் தமிழர்.

பின்னர் இவர் அங்கிருந்து அகன்றுசென்றுவிட்டார். இருப்பினும் குறிப்பிட்ட சிறுமி மறுநாள் தனது 17 வயது சகோதரியுடன் செல்லும்வேளை, மயில்வாகனத்தை அடையாளம் கண்டுள்ளார்.

வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த மயில்வாகனத்தை அச்சிறுமியின் அக்கா தனது மோபைல் போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் அப்புகைப்படத்தை அவர் பொலிசாரிடம் கையளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் இப் புகைப்படத்தை பிரசுரித்து தமிழர்களின் உதவியை நாடியுள்ளனர். மறுதினமே பொலிசார் சந்தேக நபரைக் கைதுசெய்துவிட்டனர் என தற்போது அறியப்படுகிறது.

புதன்கிழமை கைதான மயில்வாகனம் ஏனும் நபர்மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இவர் முன்னரும் ஒரு சிறுமியை தாக்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தயாரூபன் மயில்வாகனம் தற்போது சிறையில் இருப்பதாகவும் பொலிசார் அவர்மீது வழக்குத்தொடர இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top