புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவருக்கு வயது 19.கல்லூரி ஒன்றில் இரண்டாவது வருடம் படித்து வருகிறார். அவருக்கும் குலசேகரம் அருகே உள்ள சேனம்கோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் படிக்கும்
போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த வாலிபர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை அழைத்து கொண்டு ஆட்டோ ஒன்றில் சேனம்கோடு பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கிருந்து வேட்டி மலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு குடிசையில் 5 பேரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை செல்போனில் மாறி மாறி படம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் காட்டுப்பகுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தொழிலாளர்கள் குடிசைக்குள் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்தனர். அங்கு சென்று நிலமையை கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து குலசேகரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பொலிஸார் விரைந்து சென்று 5 பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்தனர். பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணின் தாயார் அழுது கொண்டே காவல்நிலையம் வந்தார். பொலிஸார் மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top