
தனது பிள்ளையின் எதிர்காலம் கருதி அப்பிள்ளையை தனது சகோதரியிடம் ஒப்படைத்துவிட்டு தாய் வெளிநாடு சென்றுள்ளார்.சித்தியின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை சித்தியின் கணவர் (சிறுமியின் சிறிய தந்தை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
வெளிநாடு சென்ற தாய் 2012-04-25 அன்று மீண்டும் நாட்டுக்கு வந்து தனது மகளை மீட்டு தகவல் பெற்றபோது, 2012-04-29 தினத்தன்று பாலியல் வல்லுறவு சம்பவம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையம் சென்று குறித்த தாய் முறையிட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக