புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மாத்தளை - எனசல்மட - ஓவிலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 8 வயது சிறுமி தனது சிறிய தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்டி,

தனது பிள்ளையின் எதிர்காலம் கருதி அப்பிள்ளையை தனது சகோதரியிடம் ஒப்படைத்துவிட்டு தாய் வெளிநாடு சென்றுள்ளார்.சித்தியின் பாதுகாப்பில் இருந்த சிறுமியை சித்தியின் கணவர் (சிறுமியின் சிறிய தந்தை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

வெளிநாடு சென்ற தாய் 2012-04-25 அன்று மீண்டும் நாட்டுக்கு வந்து தனது மகளை மீட்டு தகவல் பெற்றபோது, 2012-04-29 தினத்தன்று பாலியல் வல்லுறவு சம்பவம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையம் சென்று குறித்த தாய் முறையிட்டுள்ளார்.

பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top