புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் நர்சிங் பல்கலைகழகத்தில் மாணவிகளின் ஆடைகளை களைய சொல்லி பாடம் நடத்திய பேராசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரம். இங்குள்ள நர்சிங் பல்கலைக்கழகத்தில் யு ஜியாவோஹூவா என்ற பேராசிரியர்
பணியாற்றினார்.

கடந்த மாதம் நர்சிங் மாணவிகளுக்கு தேர்வு நடந்தது. அப்போது, மாணவிகளின் ஆடைகளை கழற்ற சொல்லி இருக்கிறார் யு. அதன் பின் தங்களது அந்தரங்க உறுப்புகளை மாணவிகளை தொட்டுப் பார்த்து சோதனை நடத்தி உள்ளார்.

நோயாளிகளின் உடலை எப்படி பரிசோதனை செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிப்பதற்காக, தங்கள் உடலையே தொட்டு பார்க்கும் வகையில தேர்வு நடத்தியதாக யு கூறியுள்ளார்.

தான் சொல்வது போல் செய்யாவிட்டால், மாணவிகளை பெயிலாக்கி விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதற்கு பயந்து யு சொன்னபடி மாணவிகளும் ஆடைகளை களைந்துள்ளனர்.

பேராசிரியரை எதிர்த்து பேச தைரியம் இல்லாத மாணவிகள், அவர் சொன்னது போல் செய்துள்ளனர். ஆனால், அவருடைய நடவடிக்கை குறித்து தங்கள் குமுறல்களை ஓன்லைனில் கொட்டி தீர்த்து விட்டனர். இதனால் சீன மக்கள் அதிர்ச்சி அடைந்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவ, மாணவிகளிடம் மன்னிப்பு கேட்கும்படி பேராசிரியர் யுவுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அத்துடன் அவரை வேலையில் இருந்து அதிரடியாய் நீக்கி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top