புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் இந்தாண்டின் அதிகமான வெப்பநிலை காணப்பட்டாலும், வருகிற 29ஆம் திகதி முதல் புயல் மழை தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஆராய்ச்சி மையம் குறிப்பிடுகையில், இன்று காலை நீலவானமும், வெண்முகிலும் காணப்படு
ம். ஆனால் நேரம் செல்லச் செல்ல மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் இடிமழை பொழியும். ஆனால் தெற்கு, கிழக்கு பகுதிகளில் 16-21 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும்.

நாளை கிழக்குப் பகுதி வெப்பமாக இருக்கும். மேற்குப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை இரவு மத்திய மற்றும் கிழக்கு ஜேர்மனியை புயல் தாக்கும். வடகடலில் இருந்து குளிர்காற்று வீசும், கிழக்கே வெப்பமும், மேற்கே குளிர்ச்சியும் நிலவும்.

நாளை மறுதினம் கடற்கரைப்பகுதியில் குளிர்ச்சியும், உள்நாட்டில் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமும் காணப்படும். பகலில் மழையும், புயலும், சூறைக்காற்றும் நாடு முழுவதையும் தாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top