புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புற்றுநோய்களில் பொதுவாக வருபவையே தோல் புற்றுநோய். இந்த நோய் எந்த நிலையிலும் வரக்கூடியவை.இந்த நோய் உண்டாக பெரும் காரணமாக இருப்பது சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தோலின் மீது நீண்ட நேரம்
படுவதால் வருகிறது.

மேலும் நாம் எப்போது வெளியே செல்லக் கூடிய நிலை அதிகமாக இருக்கும். சூரியக் கதிர்கள் தோலின் மீது படுகிறது என்பதற்காக நாம் வெளியே செல்லாமல் இருக்க முடியுமா?முடியாதல்லவா.

ஆகவே நாம் இந்த நோய் வராமல் இருக்க சரியான உணவு முறை தினமும் கடைபிடிக்க வேண்டும்.

தோல் புற்றுநோயை வராமல் எளிதில் தடுக்க

தக்காளி: தினமும் தக்காளியை சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று சமீபத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் தக்காளியை நன்கு சமைத்து உண்டால், அதில் இருக்கும் லைகோபைன் சூரியனிடமிருந்து வரும் புற்றுநோயை விளைவிக்கும் கதிரான புறஊதாக்கதிர்களை சருமத்தில் பட்டாலும் ஆபத்தை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

மேலும் இரு ஒரு சிறந்த சருமத்திற்கு ஏற்ற அழகுப் பொருளும் கூட. ஆகவே அதனை வேண்டுமென்றால் அரைத்து சருமத்திற்கு தடவி ஒரு ஃபேஸ் பேக் போன்றும் தினமும் செய்யலாம். இல்லையென்றால் இதனை அரைத்து ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.

கத்தரிக்காய்: இதனை சாப்பிட்டால் மட்டும் புற்றுநோயானது எப்போதும் வராமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இதனை உண்டால் உடலில் இருக்கும் புற்றுநோய் விரைவில் குணமடையும்.

ஏனெனில் இதில் பைட்டோகெமிக்கலான சோலாசோடைன் கிலைகோசைடு(solasodine glycoside) அதிகமாக இருக்கிறது. இது பரவும் மற்றும் பரவாத புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. இதன் மகிமை என்னவென்றால் உடலில் இருக்கும் புற்றுநோயானது போய்விட்டால் மறுபடியும் வராமல் இருக்கும்.

பெர்ரி: அனைத்து வகையான பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகமாக இருக்கிறது. அதிலும் புற்றுநோயை அழிக்கக்கூடிய நிறமியான எபிகைனின்(apigenin) இருக்கிறது.

மேலும் இதில் தண்ணீர் அதிகமாக இருப்பதோடு, சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஈரப்பசையும் கிடைக்கும். பெர்ரி பழங்கள் மட்டும் அல்ல, மற்ற பழங்களையும், காய்கறிகளையும் உண்டால் சூரிய கதிரால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.

காஃபி: சில சமயங்களில் காஃபி குடிப்பதும் நல்லதே. ஒரு கப் காஃபியை சாப்பிட்டால் உடலில் உள்ள எனர்ஜியின் அளவு அதிகரிக்கும். அது பல ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் காஃபியானது புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்பட்ட செல்களை புற்றுநோய் உண்டாகாமல் அழிக்கும் சக்தியானது காப்பிக்கு இருக்கிறது.

ரூட்டர்ஸ் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், காஃபி குடிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட செல்களை அழித்து, புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சன் ஸ்கிரீன்: இத்தனை நாட்கள் சருமத்தை பாதுகாத்து வந்த ஓசோன் படலம் ஓட்டையானதும் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுகிறது. ஆகவே அதனால் பெரும்பாலும் தோல் புற்றுநோயானது ஏற்படுகிறது.

இப்போது அந்த கதிர்கள் சருமத்தில் படாமல் இருக்க, வெளியே செல்லும் போது ஏதேனும் ஒரு சன் ஸ்கிரீன் லோசனை கைகளில் மற்றும் வெயில் படும் இடங்களில் தடவி சென்றாலும் நல்லது.

மேற்கூறியவாறு செய்தால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் ஏற்படும் தோல் புற்றுநோயை வராமல் எளிதாக தடுத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top