புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



பக்கத்து வீட்டு பூனையை மைக்ரோ ஓவனில் வைத்து சமைக்க முயற்சி 8 வயது சிறுவனால் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் உள்ளது ரோசெஸ்டர். இங்கு வசிக்கும் 8 வயது
சிறுவன் ஒருவன், மாடியில் வசிக்கும் ஒருவரின் செல்ல பூனையை எடுத்து வந்து தன் வீட்டில் உள்ள மைக்ரோ ஓவனுக்குள் வைத்து கதவை மூடி, சுவிட்சை அழுத்தியுள்ளான்.

அதற்குள் பூனையை தேடிய உரிமையாளர் சத்தம் கேட்டு கீழே ஓடிவந்தனர். அங்கு மைக்ரோ ஓவனுக்குள் பூனை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே சுவிட்சை ஆணைத்து பூனையை மீட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக பூனை உயிருடன் இருந்தது. எனினும், உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூனையின் வால் பகுதியும் எரிந்திருந்தது. தகவல் அறிந்து விலங்குள் வதை தடுப்பு பிரிவினர் விரைந்து வந்தனர்.

ஆனால், 8 வயது சிறுவன் என்பதால், எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறினர். எனினும், இங்கிலாந்தில் சிறுவர்களின் நடவடிக்கை குரூரமாக மாறி வருவது குறித்து அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

செல்லப் பிராணிகளை எட்டி உதைப்பதும், தலையை சிதைப்பதும், கழுத்தை திருகி கொல்வதும் போன்ற செயல்களில் சிறுவர்கள் ஈடுபட்டு வருவது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top