புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவின் டொரன்டோ நகரில் QEW தேசிய நெடுஞ்சாலை 427ல், நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்நத தந்தையும் மகளும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தபோது,எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இறந்த பெண்ணின் தாயார் என கருதப்படும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்திற்கு காரணமான எதிரே வந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top