புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அய்யாவழி, சந்திரமுகி, கோரிப்பாளையும், முத்துக்கு முத்தாக உள்பட பல படங்களில் நடித்தவர் சுஜிபாலா. நாகர்கோவில் வைத்திய நாதபுரத்தை சேர்ந்த இவர் `உண்மை' படத்தில் நடித்து வருகிறார்.


 சுஜிபாலா செய்தியாளர்களிடம்,  ’’நான் தற்கொலை செய்ய முயலவில்லை. தலைவலி மற்றும் காய்ச்சலாக இருந்ததால் எனது தாயாரிடம் மாத்திரை கேட்டேன். அவர் நீயே எடுத்துக்கொள் என கூறிவிட்டார்.


நான் மாத்திரை தெரியாமல் பவர் கூடிய 2 மாத்திரைகளை தின்றுவிட்டேன். இதனால் மயக்கமடைந்து விழுந்தேன். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 மணி நேர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டேன்.

சினிமா துறையில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கி றார்கள். யாரையும் நான் காதலிக்கவில்லை. எனக்கும், நடன இயக்குனர் ஒருவருக்கும் காதல் என்ப தெல்லாம் உண்மை இல்லை.

எனக்கும், டைரக்டர் ரவிக்குமாருக்கும் நிச்சயிக்கப்பட்டபடி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாகவில்லை. முடிவானதும் பத்திரிகைகள், மீடியாக்களிடம் தெரிவிப்போம். அனைவரும் வந்து வாழ்த்துங்கள்.

நான் தற்போது டைரக்டர் சுந்தர்.சி இயக்கும் எம்.ஜி.ஆர். படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன்’’ என்று கூறீனார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top