புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பேய் தன்னை அழைப்பதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு +2 மாணவி ஒருவர் வேலூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பத்தில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவா(35). அதே பகுதியில் உள்ள காலனி தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் குறிஞ்சி மலர்(17). இதே பகுதியில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார்.
நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற குறிஞ்சி மலர், மாலையில் வீடு திரும்பினார். அப்போது தாய் வேலைக்கு சென்றிருந்ததால், வீட்டில் தனியாக இருந்த குறிஞ்சி மலர் மின்விசிறியில் சேலையின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வேலை முடித்து வீடு திரும்பிய ஜீவா, வீட்டில் வந்து பார்த்த போது மகள் தற்கொலை செய்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஜீவாவின் வீட்டில் போலீசார் நடத்திய ஆய்வில், குறிஞ்சி மலர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்தது.
இதில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களாக என்னையும், எனது உறவினர், நண்பர்கள் உட்பட 4 பேரை பேய் கூப்பிட்டது. அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களை பேய் கூப்பிட வேண்டாம். நான் மட்டும் பேயிடம் செல்கிறேன். எனது சாவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்த குறிஞ்சி மலரின் தந்தை முத்துகுமாரும், தற்கொலை செய்து இறந்துள்ளார். தற்போது குறிஞ்சு மலரும் தற்கொலை செய்து இறந்துள்ளார். மேலும் தன்னையும், சிலரையும் பேய் கூப்பிட்டதாக குறிஞ்சி மலர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top