புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

துருக்கியில் தன்னை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபரை கௌரவக் கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.தென்மேற்கு துருக்கியிலுள்ள சிறிய கிராமமொன்றில் வாழும் இரு பிள்ளைகளின் தாயாரான நெவின் யிடிறிம் (வயது 26) என்பவரே தனது கணவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலுக்காக பிரிதொரு நகருக்கு சென்றதையடுத்து தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த நுரெட்டின் கிடெர் என்பவரை படுகொலை செய்துள்ளார்.

தனது 2 வயது மற்றும் 6 வயது பிள்ளைகளை கொல்லப் போவதாக அச்சுறுத்தியே கிடெர் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக யிடிறிம் தெரிவித்தார்.இவ்வாறு அவர் தொடர்ந்து 8 மாத காலமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாக யிடிறிம் கூறினார்.யிட்றிமின் கணவரின் அத்தையை திருமணம் செய்த கிடெருக்கு (35 வயது) 15 வயது மற்றும் 9 வயதுடைய பிள்ளைகள் உள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top