புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் திரையுலகில் 1990ஆம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மந்த்ரா.தமிழ் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.சில வருடங்களுக்கு முன் திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு, குடும்பத்தினருடன் பெங்களூரில் வசித்தார்.


இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்பதுல குரு படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.இப்படத்தில் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரத்தை போன்று திமிர் பிடித்த வில்லி வேடத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்தை பி.டி. செல்வகுமார் இயக்குகிறார்.

மந்த்ரா நடிக்கும் காட்சிகள் தற்போது படமாகி வருகிறது.

இப்படத்தில் வினய், பிரேம்ஜி, சத்யன், அரவிந்த், ஆகாஷ் சாம்ஸ், லட்சுமிராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top