புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பார்சலில் அனுப்பப்பட்ட மலைப்பாம்பை கண்டு, தபால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ளது, சபி நகரம். இங்குள்ள தபால் அலுவலகத்திற்கு வந்த பார்சல்களை, ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து கொண்டிருந்தனர். வந்த பார்சல்களுக்கு நடுவே, வெள்ளை மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து
கொண்டிருந்தது. இதை கண்டு, ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.
அதன் பின், வனத் துறையினர் உதவியுடன், ஒரு மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. மேலும், மூன்று மலைப்பாம்புகள், பார்சலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.மலைப்பாம்பை உரிய முறையில் பெறாமல், தபால் பார்சலில் அனுப்பி, பெற்று கொள்ள முயன்றவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.வெள்ளை மலைப்பாம்பு விஷமற்றது என, பின் தான் தெரியவந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top