புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.


நித்யஸ்ரீ மகாதேவன், பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி. கர்நாடக இசைப் பாடகியான இவர் ஏ.ஆர்.ரஹ்மானால் பின்னணி பாடகியாக திரைத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டவர் (ஜீன்ஸ்: கண்ணோடு காண்பதெல்லாம், படையப்பா: மின்சாரக் கண்ணா)

இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும், அங்கு பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதை தெரிந்துகொண்ட அவரது உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top