புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கையில் நேற்று ஊவா மாகாணத்தின் பல பகுதிகளிலும் கறுப்பு நிற மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் அழியும் என்ற வதந்தி கிளம்பியதை அடுத்து இலங்கையில் பரவலாக மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களில் மழை பெய்துள்ளன.

அத்துடன் பல இடங்களில் மீன், இறால், முதலை மழைகளும் பெய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதன் மற்றொரு  அங்கமாக நேற்று வெள்ளிக்கிழமை ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் கறுப்பு நிறத்தில் மழை பெய்துள்ளது.

ஊவா மாகாணத்தில் உள்ள உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளிலேயே கறுப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கறை காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கறுப்பு நிறத்திலான மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top