புதிய குருதுவத்தை பொலிஸ் பிரிவில் கோனவத்தை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பிலிபைன்ஸ் நாட்டு பிரஜை உயிரிழந்துள்ளார்.
கொத்மலையில் இருந்து பியகமவிற்கு மின்கடத்தும் அதிவேக மின்கம்பி கட்டமைப்பில் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த பிலிபைன்ஸ் நாட்டு பிரஜையே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.
சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதிய குருதுவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக