புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் 8 வகுப்பு படிக்கும் மாணவியை அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு நாட்களாக வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடூரமாக கற்பழித்துள்ளார். மாணவி கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திடீர்நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது 15 வயது மகள் சத்திரப்பட்டியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் தனது வீட்டின் அருகிலேயே சைக்கிள் ஓட்டி பழகி வந்தார்.

இவரது வீட்டுக்கு அருகில் வசித்து வருபவர் கருப்புசாமி (வயது19). இவர் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சைக்கிள் ஓட்டி பழகி வந்த மாணவியை கருப்புசாமி தனது வீட்டிற்கு தூக்கி சென்று பலவந்தமாக கற்பழித்துள்ளார். தொடர்ந்து 2 நாட்கள் அவரை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்தார். பின்னர் அவரை தூக்கி சென்று வீட்டின் அருகே விட்டு சென்று விட்டார்.

இது குறித்து மாணவி தனது தந்தையிடம் கூறினார். ரத்தினம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியை ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
Top