புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவின் டெல்லியில் குடிபோதையில் இருந்த 32 வயதான நபரொருவர், தனது 82 வயது பாட்டியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.


வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் பகுதியில் வசிப்பவர் நசீம் (32). வேலை ஏதுமின்றி, குடி பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட நசீம், சொந்த பாட்டியிடம் மிருகத்தனமாக நடந்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி பெண்களிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் நசீமைப் பிடிக்க பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேவேளை, இந்தியாவின் மத்திய டெல்லி பகுதியில் எட்டு மாத கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற 22 வயது வாலிபன், அந்த பெண் கடைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டினுள் நுழைந்து எட்டு மாத பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டு தப்பி தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Top