புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தனது கள்ள மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் தல்துவ – தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தனது கள்ள மனைவி மீதான சந்தேகத்தினால் இந்நபர் கொலை செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனது பிள்ளைகளுக்கு சுகயீனம் காரணமாக அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி தன்னை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் சந்தேகநபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டமையின் காரணமாக நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கேகாலை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த தண்டனையை இன்று விதித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top