புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கல்கிஸ்ஸ பிரதேச மசாஜ் பார்லர் ஒன்றில் கடமையாற்றிய பெண்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ கொளுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு பெண்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்களை எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நதீசா கயானி மற்றும் ரசினி பாக்யா ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பெண்களும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top