புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நமக்கு எவ்வளவு பிரச்சனை என்றாலும் ஒரு குழந்தையின் பொக்கை வாயோடு கூடிய சிரிப்பை பார்த்தால் நமது உள்ளத்திலும் சந்தோசத்தோடு ஓர் உவகை பிறக்கும்

பிள்ளை செல்வம் என்பது ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை .
கல்யாணத்திற்கு பிறகு ஒரு ஆணை ஆண் மகனாகவும் ,
ஒரு பெண்ணை பெண்ணாகவும் இந்த சமூகம் மதிப்பது 
குழந்தை பேறு கிடைத்தால் தான் .

இல்லை என்றால் அவனுக்கு பொட்டை என்றும் ,
அப்பெண்ணிற்கு மலடி என்றும் பெயர் சூட்டி விடுவார்கள் .
இதனால் அவர்களின் மனம் புண்படுமே என்று நினைக்காமல் 
வார்த்தைகளை அள்ளி வீசி விடுவார்கள் ஒரு சில சமூகத்தார் 

மலட்டு தன்மைக்கான காரணங்களை கண்டு 
தகுந்த மருத்துவரிடம் காண்பித்து குறைகளை நீக்கி 
மழலை செல்வம் பெற்றிடுங்கள் 

மலட்டு தன்மையின் வகைகள்

1.கருவே தரிக்காமல் இருப்பது முதல் நிலை மலட்டுத் தன்மை

2.கருத்தரித்த பின்னர் கருச் சிதைவு ஏற்படுவதை இரண்டாம்
நிலை மலட்டுத் தன்மை (அடிக்கடி கருச்சிதைவு )


ஆண்களின் மலட்டுத்தன்மையின் காரணங்கள் :

1.ஆணின் விந்தணுவில் உயிர் அணுக்கள் இல்லா நிலை

2.உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை

3.ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து 
போகாத நிலை

4.விந்தனுவின் பீச்சும் திறன் இல்லாமை

5.உயிரணுக்களை கொள்ளக் கூடிய எதிர்மறைப் புரதங்கள்
விந்திலே கலந்திருத்தல்.

6.உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள் 
.
7.பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலார்ராத தன்மை.

8.விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்

9.விதைப் பைக்குள் விதையானது திருகிக் கொண்டு இருத்தல் .

10.காயம் ஏற்படுதல்,வீக்கம் ,அடி படுதல் போன்றவற்றால் 
விதையில் ஏற்படும் பாதிப்பு .

11.விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு

12.முற்றிய காசநோய்

13.விதையானது வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் 
பாதிப்படைவது ,இதற்க்கு நாம் அணியும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாகும் .

14.தொடர்ந்து தீய பழக்க வழக்கங்கள் (மது,புகை மற்றவை ) 


பெண்ணின் முதல்நிலை மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்

1.முட்டை ,மாதவிடாய்க்குப் பிறகு14-15 நாட்களில் 
கருப்பையிலிருந்து முதிர்ந்த கருவாக வெளியேற 
வேண்டும் .குழந்தை இல்லாத பெண்ணிற்கு இது 
நிகழ்வதில்லை .

2.வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற
அமைப்புகள் வழியாக கருப்பைக்கு வருவதில் தடை
 .
3.இணைக்குழாயில் அடைப்புகள்.

4.கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும் பக்குவம்
பெறாத தன்மை.

5.கரு தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில் 
சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல் .

6.கர்ப்பப்பை வாயில் தொற்று நோய் ,பிறநோய்களின் பாதிப்புகள்

  இவைகள் தான் காரணங்கள் .இவைகளை அறிந்து கொண்டு
  குறைகளை நீக்கி சந்தோசமாக வாழுங்கள் .

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top