புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குட்டி போட்டு பால் தருவதால், வௌவால் பறவை இனத்தில் சேர்க்க முடியாது. வவ்வாலுக்கு கண் உண்டு. இருந்தாலும் அதற்கு கண் பார்வைத் திறன் தேவையில்லை. வௌவால் "சவுண்டு ரேஞ்சிங்" என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு
அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை உணர முடியும்.

வௌவாலின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் சைக்கிள் அளவில் ஒலி உண்டாகிறது. இந்த சத்தத்தை நம்மால் உணர முடியாது. இவை சத்தத்தை சின்ன சின்ன துடிப்பலைகளாக வெளிப்படுத்தும்.
ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம் தான். 17 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால், வௌவால் வெளிப்படுத்தும் ஒலிக்கும், அந்த ஒலி எதிரொலித்து திரும்பும் ஒலிக்கும் இடையே உள்ள நேர வித்தியாசத்தை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப சாமார்த்தியமாக பறக்கிறது வௌவால்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top