புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வங்காளதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம், திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு சென்று விட்டார். அவரது மனைவி ரபிகுல் ஹவா அக்தர் ஜுய் அதிகம் படிக்கவில்லை, கணவர் வெளிநாடு சென்ற நிலையில் ஹவா அக்தர் கல்லூரிக்கு சென்று படித்தார். இதை இஸ்லாம் விரும்பாததால், படிப்பை
நிறுத்த சொன்னார். அதை ஹவா அக்தர் கேட்காமல் தொடர்ந்து படித்தார்.

இந்த நிலையில் திடீரென இஸ்லாம் வங்காளதேசத்துக்கு திரும்பினார்.தனது மனைவியிடம் உனக்கு அதிசயமான பரிசு பொருள் கொண்டு வந்து இருக்கிறேன் என கூறிய இஸ்லாம் அவரது கண்களையும், கைகளையும் கயிற்றால் கட்டியதோடு வாயில் பிளாஸ்திரியால் ஒட்டினார். பின்னர் தனது மனைவி ஹவா அக்தரின் வலது கையில் உள்ள 5 விரல்களையும் வெட்டினார்.

தனது பேச்சை கேட்காமல் கல்லூரிக்கு சென்று படித்ததற்காக இந்த தண்டனை வழங்கியதாக கூறினார். இதற்கு அவரது உறவினர்களும் உடந்தையாக இருந்தனர். வேதனையால் துடித்த ஹவா அக்தர் அதன்பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வெட்டப்பட்ட அவரது விரல்களை ஒட்டி வைக்க முடியாது என வைத்தியர்கள் கூறிவிட்டனர்.

ஏனெனில் விரல் துண்டான 6 மணி நேரத்துக்குள் தான் சத்திரசிகிச்சை செய்து மீண்டும் சேர்த்து வைக்க முடியும். இதற்கிடையே இஸ்லாம் கைது செய்யப்பட்டார். தற்போது ஹவா அக்தர் தனது தந்தை வீட்டில் தங்கியுள்ளார்.
இனி தனது கணவருடன் வாழ விரும்பவில்லை என கூறிவிட்டார். அதே நேரத்தில் இடது கையால் எழுதி பழகி வரும் அவர் மீண்டும் கல்லூரி படிப்பை தொடருவேன் என தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top