புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தானில் குடும்ப தகராறு காரணமாக இளம் மனைவியின் மூக்கு, உதடுகளை அறுத்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் தேரா காஸி கான் மாவட்டத்தில் உள்ளது தார்க் நகரம்.
இங்கு பழங்குடியின மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். காதிர் பக்ஷ் என்பவருக்கு சமீபத்தில் சல்மா என்ற 17 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

அதன்பின், இளம் தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் மூக்கு, உதடுகளை ஆத்திரத்தில் அறுத்துவிட்டு காதிர் தப்பியோடி விட்டார். என்ன தகராறு சல்மா மீது காதிர் ஆத்திரம் அடைய காரணம் என்ன என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. தலைமறைவான காதிரை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top