புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குடும்பம் நடத்த வீட்டுக்கு வர மறுத்த மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொருக்குப்பேட்டை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மோகன் (30), கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவி (27). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்து கொண்டு கொருக்குப்பேட்டை மீனாம்பாள் தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு தேவி போய்விட்டார். நேற்று மாமியார் வீட்டுக்கு சென்ற மோகன், மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார்.

ஆனால், வீட்டுக்கு வரமுடியாது என்று தேவி பிடிவாதமாக கூறிவிட்டார். ஆத்திரம் அடைந்த மோகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளார். இதில் தேவிக்கு கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டு விழுந்தது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த தேவியை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். புகாரின் பேரில் ஆர்.கே நகர் இன்ஸ்பெக்டர் ஷேக் பாபு வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top