புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எப்பாவெல பிரதேசத்தில் நால்வர் கூரான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ வீர்ர் ஒருவர், அவரின் மனைவி, தயார் மற்றும் தாயாரின் மூத்த சகோதரி ஆகியோரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இராணுவ வீரரும் அவரின் மனைவியும் 23 வயதுடையவர்கள் என்பதுடன் தயார் 49 வயதும், தாயாரின் மூத்த சகோதரி 55 வயதும் உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சம்வபம் தொடர்பில் எப்பாவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.நேற்று இரவு இந்த அகோர கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் பனாகொட இராணுவ முகாமில் சேவை புரிந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, எப்பாவெலயில் அண்மையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் தூக்கிட்டு மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top