புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்த 12 பேர் தங்காலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தங்காலை ரெக்கவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது
செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top