புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



  1. அச்சத்தைவிட மோசமானதொரு ஆலோசகர் இல்லை.
  2. எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
  3. ஏழைகள் இதயத்தால் உபசரிக்கிறார்கள்.
  4. ஒன்றோடு ஒன்று சண்டைபோடும் நாய்கள் ஓநாய்க்கு எதிராக ஒன்றுபடுகின்றன.
  5. ஓர் இரகசியத்தை அறிய விரும்புகிறாயா? ஒரு குழந்தை, ஒரு பைத்தியம், ஒரு குடிகாரன், ஒரு மனைவி இவர்களிடம் கேள்.
  6. எப்படிப்பட்ட முட்டாளும் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால்தான் அதனைக் காப்பாற்ற முடியும்.
  7. கள்வனிடத்திலிருந்து ஒருவன் திருடும்போது எல்லாம் வல்ல இறைவனே சிரிக்கிறான்.
  8. குடுவையிலிருந்து வெளியே வந்ததும் மது மிக உரக்கப் பேசுகிறது.
  9. சத்தியத்திற்கு மற்றொருபெயர் ‘மனசாட்சி’
  10. பள்ளிக்கூடத்தில் போய் முட்டுவதால் மட்டும் படிப்பு வருவதில்லை.
  11. பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.
  12. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
  13. தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.
  14. நம்பிக்கை உறுதியாக இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை.
  15. நீ யாரை நேசிக்கிறாய் என்பதை என்னிடம் சொல். நீ யார் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.
  16. நொண்டியைவிடப் பொய்க்காலன் விரைவில் வீழ்வான்.
  17. நம்பிக்கை செழிப்பைத் தராது. ஆனால், தாங்கி நிற்கும்.
  18. யூதனைப்போல் கணக்குப் பார். சகோதரனைப்போல் ஏற்றுக்கொள்.
  19. பேசுகிறவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top