புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நாள்தோறும் விஞ்ஞானிகள் புதுவிதமான படைப்புக்களில் முனைப்புக் காட்டிவருகின்றனர். இதனடிப்படையில் சீனாவில் சிங்கத்துக்கும் புலிக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலப்பு மூலம், புலி, சிங்கம் சேர்ந்த குட்டிகள் பிறந்துள்ளன. இவை “TIGON” என்ற பெயர் கொண்டு
அழைக்கப்படுகின்றன.

மரி என்ற பெயர் கொண்ட பெண் சிங்கத்துக்கும், ஓர் ஆண் புலிக்கு ம் இடையில் தான் இவ்வாறான விநோத குட்டிகள் பிறந்துள்ளன. மூன்று குட்டிகள் பிறந்த போதிலு ம், பிறந்து சிறிது நேரத்திலேயே ஒரு குட்டி இறந்து விட்டது. தற்பொழுது இரண்டு குட்டிகள் நலமாக உள்லன.
இது பற்றி சிங்கத்தின் பராமரிப்பாளர் சூரியான்சி கருத்து தெரிவிக்கையில், பொதுவில் சிங்கமும், புலியும் இனக்கலப்பில் ஈடுபடு வது அரிது. உலகில் இதுவரை 10 க்கு உட்பட்ட “TIGON” கள் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top