புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கைவிடப்பட்ட இரண்டரை மாதக் பெண் குழந்தையொன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் பொலிஸாரினால் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.கல்முனை இ.போ.ச பஸ்தரிப்பு நிலையத்தில் இக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த மட்டக்களப்பு, பாலமுனை கிராமத்தைச் சேர்ந்த நவரட்டினா என்ற பெண், குறித்த இரண்டரை மாதக் குழந்தையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தனக்கு அறிமுகமில்லாத பெண்ணொருவர், தான் கடையில் பொருட்கள் வாங்கி வரும்வரை இக்குழந்தையை வைத்திருக்குமாறு தன்னிடம் குழந்தை தந்துவிட்டுச் சென்றதாகவும் இருப்பினும் அப்பெண் நீண்டநேரமாக வராத நிலையில் தான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸாரிடம் குழந்தையை ஒப்படைத்த பெண் தெரிவித்துள்ளார்.

இக்குழந்தையை கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் தற்காலிக பராமரிப்புக்காக ஒப்படைத்துள்ள கல்முனை பொலிஸார் இது தொடர்பான விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top