புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வடமராட்சி பருத்தித்துறை 3 ஆம் குறுக்குத் தெரு, சின்னத் தோட்டம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து பெருமளவில்...

புகை வெளியேறவே சந்தேகம் கொண்ட இவரது சகோதரர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது சகோதரி உள்ளே எரிந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளார். பருத்தித்துறை மூன்றாம் குறுக்குத்தெரு கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பதுமைமலர் (வயது 44) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இதேவேளை இவர் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன், இவர் திருமணம் ஆகாதவரெனவும் விரக்தியின் காரணத்தினாலேயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அயலிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பவத்தினை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸாரும் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வெனிற்றா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தினை மருத்துவப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top