புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்தவர் மசாய்சி யமடா (80). இவர் மீன் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக அவரது மனைவி திடீரென மாயமாகி விட்டார்.


இதுகுறித்து, உறவினர்கள் கேட்டதற்கு அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை என்று கூறி சமாளித்து வந்தார். மேலும், போலீசிலும் புகார் செய்திருந்தார்.

எனவே இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, இவர் தனது மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாய் தகராறில் அடித்தபோது மனைவி இறந்து விட்டதாக கூறினார்.

மேலும், அவரது உடலை 10 ஆண்டுகளாக குளிர் சாதன பெட்டியில் பாதுகாப்பாக மறைந்து வைத்து இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மனைவியின் உடலை மீட்டனர்.

உடல் துணியால் சுற்றப்பட்டு இருந்தது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top