
இந்நிலையில் செந்தில்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால் செந்தில்குமாருக்கும், சித்தேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை சித்தேஸ்வரி தனது தாயாருடன் செந்தில்குமார் வீட்டில் இருந்த தனது பொருட்களை எடுத்து செல்வதற்காக வந்தார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் கத்தியால் சித்தேஸ்வரியை குத்தினார். தடுக்க முயன்ற அவரது தாயாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டார். படுகாயம் அடைந்த சித்தேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சூரம்பட்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக