புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவாவில் 4 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கட்டிடத்தொழிலாளி ஒருவரை அம்மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த சிறுமி மே 20ம் திகதி மாயமானாள். சிறுமியை தேடி வந்த பெற்றோரிடம்
அருகில் இருக்கும் கட்டிடத்தில் சிறுமியின் உடல் கிடப்பதாக கட்டிட தொழிலாளி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த தீபக் குமார் என்ற கட்டிட தொழிலாளியிடம் விசாரித்த போது, குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சொக்லேட் தருவதாக கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுமியை கற்பழித்தாகவும், பின்பு அச்சிறுமி அவளது தாத்தாவிடம் கூறி விடுவாளோ என பயந்து அச்சிறுமியை கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீபக் குமாரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top