புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சகோதரிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.

4 வயது மற்றும் 6 வயதுடைய இரு சகோதரிகளை, அவர்களின் தாயர் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி அயல் வீட்டுக்கரர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

இவ்வேளை குறித்த நபர் இரு சிறுமிகளையும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மங்குளம் பொலிஸில் சிறுமிகளின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சிறுமிகளும் நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண்கள் நோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட இரு சிறுமிகளும் யாழில் மருத்துவ பரிசோதனைக்கு உப்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top