புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இரண்டு மகன்களை, 15வது மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்ற கொடூர தாயை, ரஷ்ய போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் கலினா ரியாப் கோவா. இவருக்கு, ஏழு மற்றும் நான்கு வயதில், இரண்டு மகன்கள் இருந்தனர். மாஸ்கோவில் உள்ள
குடியிருப்பில், எட்டாவது மாடியில் இவர் வசித்து வந்தார்.

இவரின் கணவர், இவரை ஏமாற்றி விட்டு சென்று விட்டார். இந்த மன வருத்தத்தில் இருந்த கலினா, இரண்டு மகன்களை வளர்க்க சிரமப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், அவர் இரண்டு குழந்தைகளையும், 15வது மாடிக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த பால்கனி வழியாக, கீழே தள்ளி விட்டார்.

இதில், இரண்டு குழந்தைகளும், பலத்த காயமடைந்து பலியாயின. இதையடுத்து, கலினா கைது செய்யப்பட்டார். இது குறித்து கலினா குறிப்பிடுகையில், “என் குழந்தைகள், தற்போது சொர்க்கத்துக்கு சென்று விட்டனர்’ என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top