புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குடும்ப பிரச்னையால் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் இடையன்குளத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஏசுரான் (32). இவர் டில்லி போலீஸ்கமாண்ட் படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அயிடா.


அயிடாவிற்கும் ஏசுரானுக்கு கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பாக ஏசுரானி்ன் மாமனார் ‌ஜெயராஜ், மகள் அயிடாவுடன் ‌டில்லி சென்று ,போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து , தனது மகளுடன் சேர்ந்து வாழ ஏசுரான் மறுத்துவருவதாக புகார் கூறினார்.


இதனால் ஆத்திரமடைந்த ஏசுரான் இன்று இடையன்குளத்தில் உள்ள மாமனார் ஜெயராஜை அரிவாளால் சரமாரியாக ‌வெட்டினார். பலத்த காயமடைந்த ஜெயராஜ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசுரானை கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top